கிண்டல் அடித்த துரைமுருகன் - ஒரு துண்டால் சட்டப்பேரவையில் நடந்த - சுவாரசிய பேச்சு

x

சட்டப்பேரவைக்கு பச்சைத் துண்டு அணிந்து வந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதில் உரையை தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி வழங்கி குழந்தைகளுக்கு நாட்டுப் பற்றை ஊக்குவிப்பார்கள் என்றும், அதுபோல் தான் மட்டும் பச்சைத் துண்டு அணியாமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பச்சைத் துண்டு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதனை ஆமோதித்த சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் அனைவருக்கும் நாளை பச்சைத் துண்டு வழங்குவார் எனக் கூறினார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்