"விழுப்புரத்திற்கு அநீதி இழைக்கும் திமுக" - அன்புமணி பரபரப்பு பதிவு

x

எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இது விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம், அநீதி என அன்புமணி விமர்சித்துள்ளார். இதற்குக் காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க அரசை வீழ்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்