அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி அந்த வார்த்தையில் திட்டிக்கொண்டு சம்பவம் - பரபரப்பான மாநகராட்சி

x

காரைக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டது சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் தலைமையில் கூடிய மாமன்ற கூட்டத்தில், 27 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரகாஷ் பேசினார். அப்போது கொசு உற்பத்தியை தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் 80 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 350 ரூபாய் சம்பளம் வழங்கிவிட்டு கணக்கில் 702 ரூபாய காட்டி, 3 மாதத்தில் 48 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் அங்கிருந்த 13 வது வார்டு திமுக கவுன்சிலர் சித்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்