"24,700 பேருக்கு வேலை வாய்ப்பு" அமைச்சர் சொன்ன `சூப்பர் டூப்பர்' தகவல்

x

தூத்துக்குடியில் 21 ஆயிரம் கோடியில் செம்கார்ப் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் காற்றாலைகளை புதுப்பிக்கும் கொள்கை மூலமாக 25 சதவிகிதம் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி துறையில் மூன்று முக்கிய கொள்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மொத்தம் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இதன்மூலம் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்