"ஒரே நாளில் 4,000 ஆசிரியர்கள்..." - வெளியான தகவல் | Teachers

x

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிடமாதலுக்கு தொடக்க கல்வித் துறையில் 2,199 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 2,000 பேரும் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நாளில் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொது மாறுதல் விண்ணப்பங்களை மே 17ம் தேதி மாலை 6 மணி வரை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்