கிரீன் சிக்னல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்... ஆனாலும்.. கெஜ்ரிவாலுக்கு அடுத்த சிக்கல்... `மீண்டும்..'

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு சி.பி.ஐ. வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல், ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் இருந்து காணொலி வாயிலாக டெல்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், சி.பி.ஐ. வழக்கில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்