"விரைவில் SPV புலி பாயும்" - கோவையில் பரபரப்பை கிளப்பிய அதிமுக போஸ்டர்

x

வெற்றிக்காக விரைவில் SPV புலி பாயும் என்ற வாசகங்களுடன், கோவையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.கவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன், புலி படத்தையும் சேர்த்து சுவரொட்டிகளை, மாநகர் முழுவதும் அதிமுகவைச் சேர்ந்த கோட்டை ஹக்கீம் என்பவர் ஒட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த நிலையில், கோவையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்