``சீமானுக்கே தெரியாமல்..'' SP வருண் விவகாரம்.. ``1 மாதம் தான்... எதற்கும் தயார்..'' நாதக ஆவேசம்

x

திருச்சி புறநகர் எஸ்பி வருண் குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையேயான பிரச்சினை குறித்து சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி வழக்கறிஞர் பாசறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது திருச்சி புறநகர் எஸ்பி வருண்குமார் தரப்பிலிருந்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸ்க்கு தங்கள் வழக்கறிஞர் பாசறை நிர்வாகி சேவியர் பெலிக்ஸ் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டதாகவும்...

ஆனால் அந்த பதில் நோட்டீஸ் சீமானின் அனுமதியின்றி அளிக்கப்பட்டதால் சேவியர் பெலிக்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... அதேசமயம் திருச்சி எஸ்பி வருண்குமார் தனிப்பட்ட வகையில் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு வழக்குகளை நாதகவினர் மீது அவர் பதிவு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இந்தப் பிரச்சினைக்கு வருண் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அவர் ஒரு மாத காலம் அமைதியாக இருந்தால் பிரச்சனை முடியும் எனவும், அதேசமயம் அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் சட்டப்படி எதிர்கொள்ள நாம் தமிழர் தயார் என்றும் நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்