"Exit Poll பற்றி என்ன நினைக்கிறீங்க"...கருணாநிதி சிலை முன் நின்று சோனியா காந்தி சொன்ன ஒரு சொல்..!

x

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக, தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில், கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கருணாநிதியின் உருவப்படத்திற்கு சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் ராமகோபால் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக, தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்