செய்தியாளர் சந்திப்பில் நுழைந்த பாம்பு... சத்தீஸ்கர் CM சொன்ன அட்வைஸ்

x

சத்தீஸ்கர் மாநில முதல்வர் செய்தியாளர் சந்திப்பின்போது பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென்று பாம்பு உள்ளே நுழைந்ததை கண்டு, அங்கிருந்தவர்கள் பாம்பை தாக்க முயன்றனர். ஆனால் பாம்பை கொல்ல வேண்டாம் என்றும், பாம்பை ஒரு பையில் பிடித்து வேறு பகுதிக்கு விட்டுவிடுமாறும் கேட்டுக் கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்