செந்தில் பாலாஜி மூவ்.. EDக்கு பறந்த உத்தரவு

x

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும்

வழக்கில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும்,

தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், மீண்டும் தங்கள்

தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு

விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்