அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு..! நீதிபதி அதிரடி | Senthil Balaji

x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் புகார் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் புகார் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய கோரும் மனுக்களை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் புகார் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதை தொடர்ந்து, அரசு தரப்பு கூடுதல் சிறப்பு வழக்குரைஞரை நியமிக்க கோரி புதிய மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்