"கோஷ்டி சண்டை..சரியான ஆள்இல்லை" - சரவெடியாய் வெடிக்கும் சசிகலா

x

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில், திமுக கோஷ்டி பூசலால் நகராட்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை என, சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில், அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளை மேற்கொண்ட அவர், பண்பொழி, கரிசல் குடியிருப்பு, அச்சன்புதூர் இலத்தூர், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, கடையநல்லூர் நகராட்சியில் திமுகவின் கோஷ்டி சண்டையால் நகராட்சியின் எந்த பணியும் நடைபெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய அரசை நடத்துபவர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்ததால் கிராம மக்களின் பிரச்சனை தெரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்