மத்திய பட்ஜெட்.. அதிரவிடும் சசிகலாவின் ரியாக்சன்

x

மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், சாமானிய மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அம்சங்கள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறாததால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு உயர்கல்வி கடனுக்கான உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்