பாஜகவால் திண்டாடும் இளைஞர்கள் -கொதித்தெழுந்த ராகுல் காந்தி

x

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. ஹரியானா மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அம்மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், வெளிநாடுகளில் வேலை பார்த்து வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அவர் விடுத்த அறிக்கையில், பாஜக பரப்பியுள்ள வேலையில்லா திண்டாட்டம் என்ற நோய்க்கு, தங்கள் அன்புக்குரியவர்களை பிரிந்து லட்சக்கணக்கான குடும்பங்கள், அதற்கான விலையை கொடுத்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பறித்து, கடந்த 10 ஆண்டுகளில், ஹ்ரியானா உள்பட நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு, பாஜக அரசு அநீதியை இழைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தங்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக இளைஞர்கள் தங்களின் அன்புக்குரியவர்களே விட்டு பிரிந்து செல்லும் சூழல் ஏற்படாத வகையில், அமைப்பு உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்