பிரசாரத்தில் மோடியை சீண்டிய ராகுல்

x

பிரதமர் மோடியை பரமாத்மா அனுப்பியிருந்தால் அவர் ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும்தான் உதவியிருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், பன்ஸ்காவுன் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்படும் என்றார். அம்பானி, அதானிக்கு உதவுவதற்காகவே பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் பிரதமர் மோடி என்றும் ராகுல் காந்தி கூறினார். மோடியை பரமாத்மா அனுப்பியிருந்தால் அவர் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் உதவியிருப்பார் என்றும், அம்பானி, அதானிக்கு அல்ல என்றும் ராகுல் காந்தி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்