எல்லையில் பயங்கர யுத்தம்.. செத்து மடியும் வீரர்கள்.. இதயம் உடைந்து கொந்தளித்த ராகுல்

x

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத என்கவுன்டரில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், தியாகிகளுக்கு தனது பணிவான அஞ்சலியை செலுத்தி, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவது மிகவும் வருத்தமும் கவலையும் அளிப்பதாகவும், தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதும், நாட்டின் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், ஒவ்வொரு தேசபக்த இந்தியனின் கோரிக்கையாக உள்ளதாகவும், இந்த துயரமான நேரத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்