ராகுல் காந்தி போட்ட ஒற்றை பதிவு... பரபரக்கும் அரசியல் களம்

x

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'தனியார்மயமாக்கல்' மாடல் மூலம் நாட்டின் வளங்கள் சூறையாடப்படுவதாக தெரிவித்துள்ளார். உயர்மட்ட பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், பொதுத் துறையில் மட்டும் சுமார் 6 லட்சம் நிரந்தர வேலைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதன் மூலம் எவ்வளவு வேலைகள் நீக்கப்பட்டன என்பது கணக்கே இல்லை எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரகசியமாக பறிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்