``ராகுல் நாக்கை அறுத்தால்..'' - பிரதமருக்கு பறந்த பரபரப்பு கடிதம்.. பாஜக கொடுத்த அதிர்ச்சி ரிப்ளை

x

நாட்டின் மிகப் பழமையான காங்கிரஸ் கட்சி அதன் இளவரசரின் அழுத்தத்தால் இன்று காப்பி பேஸ்ட் கட்சியாக மாறிவிட்டதாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஜே.பி.நட்டா, பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை, மெருகூட்டி, சந்தைக்குக் கொண்டுவரும் முயற்சியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு நீங்கள் கூறிய விஷயங்கள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட உங்கள் தலைவர்களின் தவறுகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் அல்லது வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டீர்கள் என்பது தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் மிகப் பழமையான அரசியல் கட்சி அதன் இளவரசரின் அழுத்தத்தால் தற்போது காப்பி லேஸ்ட் கட்சியாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்