காட்டுத்தீயாய் பரவிய தகவல்.. நிலைமை கைமீறியதால் கமல் வெளியிட்ட பரபர அறிக்கை

x

தங்களது நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்களது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர்களை தேர்வு செய்வதற்காக ஏஜென்ட் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், வாய்ப்பு வாங்கித் தருவதாக யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்