தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் | Private School

x

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும், நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார். மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து கேட்டறிந்த அவர், பள்ளிக்கு வராமல் நின்றுபோன மாணவிகளின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வாட்ஸ்-அப் அல்லது தொலைபேசி வாயிலாக புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்