மருத்துவமனை திறப்பு விழாவை பரபரப்பாக்கிய பெண்.. டாக்டரை உடனே அழைத்த அமைச்சர்

x

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சரிடம், அங்கிருந்த பெண் புகாரளித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள் நோயாளி கட்டண பிரிவு கட்டடத்தை, அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் அமைச்சரிடம், மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இருந்தும் பயனில்லை எனவும், தனது பணம் திருடு போனதாகவும் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்