"என் மேல எவ்வளவு அக்கறை... மோடிக்கு..?" - PM மோடிக்கு பட்நாயக் சுட சுட பதிலடி

x

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சார்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் எல்லா முடிவுகளையும் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில் அதை நவீன் பட்நாயக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்...

இது மிகவும் பழைய குற்றச்சாட்டு எனவும், இதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்... ஒடிசா பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கடந்த ஓராண்டாகவே நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், இதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கலாம் என்றும் தெரிவித்ததுடன், பாஜக ஆட்சி அமைந்ததும் சிறப்பு குழு அமைத்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டிருந்த நிலையில், தனக்கு உடல் நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்த நவீன் பட்நாயக், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், தனது உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால் நேற்றைய தினம் பொதுக்கூட்டத்தில் மூன்று முறை வெளிப்படையாக அது குறித்து பேசியதற்கு பதிலாக தொலைபேசியில் தன்னை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து இருக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் தேர்தல் நேரத்தில் அவர் வாக்குகளை சேகரிக்க இவ்வாறு பேசுவதாக சாடினார்...


Next Story

மேலும் செய்திகள்