வயநாட்டுக்கு இன்று வந்து அந்த ஒரு குழந்தையை தனியே சந்திக்கும் மோடி

x

கேரளா மாநிலம் வயநாடு செல்லும் பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார். காலை 11:30 மணிக்கு கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக சென்று ராணுவம் கட்டிய பெய்லி பாலம், சூரல்மலை, வெள்ளரமலை பள்ளி, முண்டகைப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்துகிறார். மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள், பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தை அவந்திகா மற்றும் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி வயநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்