``அதற்கு மோடியே எடுத்துக்காட்டு..'' ``நானே சாட்சி..'' - அமித்ஷா நெகிழ்ச்சி | PM Modi

x

நாட்டு நலனுக்காக ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் எப்படி அர்ப்பணிக்க முடியும் என்பதற்கு அடையாளமாக பிரதமர் மோடி திகழ்கிறார் என அமித்ஷா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக பதவியேற்று, 23 ஆண்டுகள் ஆகிறது. அவரது வெற்றிப் பயணம் தொடர, பொதுவாழ்க்கையில் அவர் 23 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையொட்டி அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அவரோடு நீண்ட காலம் பயணிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியின் இந்த பயணம் சமூகத்திற்காக வாழ்பவர்களுக்கு உந்து சக்தியாக திகழ்வதாகவும், அவரது பயணத்தில் தானும் சாட்சியாக இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் நலன் வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு, உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றை எப்படி ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியும் என்பதையும் பிரதமர் மோடி எடுத்துக் காட்டியிருப்பதாகவும் அமித்ஷா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்