"எனக்கு சம்பளம் வேண்டாம்.." 11 நாள் உண்ணாவிரதம்.... பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு

x

நடிகர் பவன் கல்யாண் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ் துறையின் மோசமான நிதி நிலையை பார்த்து, சம்பளம் வாங்க தனது மனசாட்சி அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மாநிலத்தை கடனில் தள்ளியிருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆந்திர மக்களின் நலனுக்காகவும், நாட்டின் செழிப்பிற்காகவும் 11 நாள் உண்ணாவிரதம் இருந்து வராகி தீட்சை விரதம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்