அனைத்து கட்சி கூட்டம்.. எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய முக்கிய பிரச்சனைகள்

x

எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, அர்ஜூன் ராம் மேக்வால், எல் முருகன் ,ஜேபி நட்டா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். நீட் விவகாரம், மணிப்பூர் பிரச்சினை, ரயில் விபத்து, ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பில் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்