சொல்லி சொல்லி அழுத CM ஸ்டாலின்.. மனம் உடைந்து வந்த விஜய் மனைவி.. அரசியல் முதல் திரை பிரபலங்கள் வரை

x

முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய உடல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து இன்று மாலை நான்கரை மணியளவில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்