நேற்று பதவியேற்ற மோடிக்கு இன்றே காத்திருந்த முதல் அதிர்ச்சி

x

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜகவுக்கு முதல் வெற்றியை தேடித் தந்தார் சுரேஷ் கோபி... பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவரவருக்கான துறைகள் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக சுரேஷ் கோபி விருப்பம் தெரிவித்துள்ளார். நேற்று பதவி ஏற்ற பிறகு மலையாள ஊடகத்தினரிடம் பேசிய சுரேஷ் கோபி தான் நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்ற விரும்புவதாகவும், அமைச்சர் பொறுப்பு தேவையில்லை என்பதுதான் தனது நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டார். அமைச்சர் பொறுப்பில் தமக்கு விருப்பமில்லை என கட்சி தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் விரைவில் மத்திய இணையமைச்சர் பொறுப்பிலிருந்து தான் விடுவிக்கப்படுவேன் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்... திரைப்படங்களிலும் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறார். சுரேஷ் கோபியுடன் கேரள மாநில பாஜக தலைவர் ஜோசப் குரியனும் இணை அமைச்சராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்