சுருண்டு விழுந்த காங்கிரஸ் தலைவர் கார்கே.. பதறியடித்து போன் போட்டு கேட்ட PM மோடி

x

ஜம்மு-காஷ்மீரில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கதுவா மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசியபோது, திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் பிரச்சார மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே தனது உரையை மீண்டும் தொடர்ந்தார். இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்