"காங்கிரஸ் காலடி வைத்த இடத்தில் ஊழல் நிச்சயம்" - பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு | Modi

x

அரியானாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரஸ் காலடி பட்ட இடமெல்லாம் ஊழல்தான் என காட்டமாக விமர்சித்தார்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அரியானாவில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. சோனிபட்டில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, 10 ஆண்டுகளில், உலகில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டார். அரியானாவில் காங்கிரஸ் பலவீனமாகி வருவதாகவும், பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியமைக்க எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, எங்கெல்லாம் காங்கிரஸ் காலடி எடுத்து வைத்ததோ அங்கெல்லாம் ஊழல்தான் என விமர்சித்தார். இந்திய அரசு அமைப்பில் ஊழலை உருவாக்கி வளர்த்து வருவது காங்கிரஸ் கட்சிதான் என குற்றம் சாட்டியவர், காங்கிரசின் அரச குடும்பம் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம் எனவும் விமர்சித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநிலம் எப்படி சூறையாடப்பட்டது என கேள்வியை எழுப்பியவர், அப்போது அரச நிலங்கள் தரகர்கள், மருமகன்களிடம் கொடுக்கப்பட்டது எனவும் காட்டமாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்