"என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கலையே" - கொந்தளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் | Minister

x
  • எல்லா இடங்களிலும் ஆய்வு செய்து என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கலையே என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடிந்து கொண்டார். கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை நீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம், எல்லா இடங்களையும் பார்த்து என்ன பிரயோஜனம், ஒரு வேலையும் நடக்கவில்லை என கடிந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்