"திடீர் MGR , ஜெயலலிதா பாசம்" பவனை உறைய வைத்த பிரகாஷ்ராஜ் கேள்வி

x

திடீரென எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் என்ன? என்று, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க 53ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சமூக நீதி, சம உரிமை, அனைத்தும் அனைவருக்கும் என்ற நிர்வாக முறையின் மூலம் முன்மாதிரியாக திகழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனை டேக் செய்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், திடீரென எம்ஜிஆரை புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் என்ன? - மேலிடத்திலிருந்து ஏதேனும் பேசச் சொல்லி உத்தரவு வந்ததா? என்று வினவியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்