பேரமைதியாக சென்ற ஆம்ஸ்ட்ராங் இறுதி அஞ்சலி.. மாயாவதி கால் வைத்ததும் மாறிய நிலை

x

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, அக்கட்சித் தலைவர் மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி, விமானம் மூலம் சென்னை வந்தார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் உடனிருந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரம்பூரில், ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகத்திற்குச் சென்றார். அப்போது ஜெய்பீம் என தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, மாயாவதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மாயாவதி ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்