நெல்லையை உலுக்கிய சிறுவனின் பூணூல் அறுப்பு சம்பவம்.. -“இது தான்..“ - எல்.முருகன் ஆவேசம்..

x

திருநெல்வேலியில் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது தான் திராவிட மாடல் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியுள்ள அவர், மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள் என தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக சிறுவன் இல்லத்துத்துக்கு சென்று ஆறுதல் கூறியதாகத் தெரிவித்த எல்.முருகன், இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்த செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.....


Next Story

மேலும் செய்திகள்