கொல்கத்தா டாக்டர் கொலையால் கடும் விரக்தி.. ராஜினாமா.. TMC-க்கு பேரதிர்ச்சி

x

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் ஊழல் பிரச்சனைகளைக் காரணம் காட்டி, அக்கட்சி எம்.பி. ஜவஹர் சிர்கார் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கட்சித் தலைமைக்கு ஜவஹர் சிர்கார் எழுதிய கடிதத்தில், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்த தனது விரக்தியை சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்.ஜி.கர் மருத்துவமனை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மேற்குவங்க அரசின் தாமதம் குறித்தும் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக மம்தா பானர்ஜியுடன் தனிப்பட்ட முறையில் பேச முடியாமல் போனதாகத் தெரிவித்துள்ள அவர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது மற்றும் கட்சியினர் பிரச்னைக்கு தீர்வு காணாதது குறித்தும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேற்குவங்க பிரச்சனைகளை

மூன்று ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்வதுடன், அரசியலைவிட்டு விலகுவதாகவும் ஜவஹர் சிர்கார் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்