கெஜ்ரிவால் விவகாரம் - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு ...

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்பொழுது சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற சிபிஐ அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜாமின் பெறுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்த போதிலும் போலி வழக்கு மூலம் சிபிஐ கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டும் ஆம் ஆத்மி கட்சியினர் சர்வாதிகார அடக்குமுறையின் அனைத்து எல்லைகளையும் பாஜக கடந்துள்ளதாகவும் எத்தனை அட்டூழியங்கள் செய்தாலும் கெஜ்ரிவால் தலைகுனிய மாட்டார் என்றும் காட்டமாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்