வெளியே வந்த கெஜ்ரிவாலை திணறவிடும் `மாலிவால்' விவகாரம்... அதிகாரிகள் அதிரடி

x

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உதவியாளர் பிபவ் குமார் ஆம் ஆத்மி கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிபவ் குமாருக்கு

தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் பிபவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லியில் உள்ள பிபவ் குமார் வீட்டில் இரண்டாவது முறையாக சம்மன் வழங்க தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் முயன்றனர். வீட்டில் இருந்தவர்கள் சம்மனை ஏற்க வாங்க மறுத்ததால், அதனை அதிகாரிகள் பிபவ் குமார் வீட்டு வாசலில் ஒட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்