சேர்த்து வைக்க வந்த நண்பனோடு சேர்ந்து லூட்டி அடித்த காதலி...அந்த துயரத்தை நடித்தே காட்டிய காதலன்

x

சேர்த்து வைக்க வந்த நண்பனோடு சேர்ந்து லூட்டி அடித்த காதலி...அந்த துயரத்தை நடித்தே காட்டிய காதலன்

வைரலாக பரவும் வீடியோ

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சினிமாவை மிஞ்சி அரங்கேறி இருக்கும் சம்பவம் ஒன்று பகீர் கிளப்பி இருக்கிறது.

கரூரை சேர்ந்தவர் சரவணன். 42 வயதான இவர், அரியூர் ஊராட்சி செயலாளராக பணி புரிந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், கணவரை இழந்த பெண்ணான ஜெயகாளியம்மாள் என்பவருடன் சரவணனுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், கடந்த 2003ம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பதவியில் இருந்து சரவணன் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால், தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி என்பவருடன் சரவணன் ஓட்டுநர் வேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது, சரவணனுக்கும் ஜெய காளியம்மாளுக்கும் இடையே பிரச்சினை ஏற்படவே, இதனை தீர்த்து வைக்க வந்த பால்பாண்டி மீது ஜெயகாளியாம்மாளுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவாக சரவணனை விட்டு பிரிந்து வந்த ஜெயகாளியம்மாள் பால் பாண்டியனுடன் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதையறிந்திராத சரவணன் தன்னை ஜெயகாளியம்மாளுடன் சேர்த்து வைக்ககோரி பால் பாண்டியை வலியுறுத்திய நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதிக்கு சரவணனை தனியே அழைத்திருக்கிறார். இதன்படி அங்கு சென்ற சரவணனை பால் பாண்டி கட்டையால் தாக்கி, கை, கால்களை இரும்பு கம்பியால் கட்டிப்போட்ட நிலையில் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பால்பாண்டியிடம் இருந்து தப்பி வந்த சரவணன், நடந்த அனைத்தையும் காவலர்களிடம் நடித்துக் காட்டி விளக்கிய காட்சி தான் தற்போது வெளியாகி பரவி இருக்கிறது.

ஜெயகாளியம்மாளின் வருகைக்காகவும், அவரின் கண்முன் வைத்து சரவணனை கொல்லவும் பால்பாண்டி திட்ட மிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நூலிழையில் தப்பி தாளவாடி மலைப்பகுதியில் இருந்து ஓடி வந்த சரவணன்

தாளவாடி காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், வனப்பகுதிக்குள் மறைந்திருந்து பால்பாண்டியை நோட்டமிட்ட போலீசார், பால்பாண்டியையும், அவருக்கு உடந்தையாக இருந்த கங்கப்பா என்பவரையும் கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் , தலைமறைவாக இருக்கும் ஜெயகாளியம்மாளை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்