"மிரட்டி வாங்கிய ரூ.100 கோடி சொத்து.." முன்னாள் அமைச்சர் கொடுத்த மனு.. நாள் குறித்த நீதிமன்றம்

x

கரூர் மாவட்டம் காட்டூரைச் சார்ந்த பிரகாஷ் என்பவரின் மகளை மிரட்டி 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு சி.பி.சி.ஐடிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது என நீதிபதியிடம் கூறினார். இதனையடுத்து மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், முன்ஜாமின் வழக்கு விசாரணையை வருகிற 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்