"காலம் உள்ளவரை கலைஞர்" - கண்காட்சியை ரசித்த முதல்வர்

x

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு "காலம் உள்ளவரை கலைஞர் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கண்காட்சியை பார்வையிட்டார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்களை அவர் ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர், நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டு இருந்த 3டி காட்சியை ரசித்து பார்த்தார்.


Next Story

மேலும் செய்திகள்