"வெயில்ல உஷ்ணம் ஏறிடுச்சா?" - அண்ணாமலைக்கு ஈபிஎஸ் நேரடி வார்னிங்

x

ஜூன் 4-ம் தேதிக்கு பின்னர், யார் காணாமல் போவார்கள் என தெரியும் என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரகாசனுக்கு ஆதரவாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் கூட்டம் அதிமுக வெற்றியை குறிக்கிறது என்று கூறினார். தெய்வ சக்தி கொண்ட அதிமுகவை அழிக்கவும் உடைக்கவும் யாராவது முயன்றால், அவர்கள் காற்றோடு காணாமல் போய்விடுவார்கள் என்று எச்சரித்தார். 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக என்றும், இதை சீண்டிப் பார்த்தவர்கள் தொலைந்து போவார்கள் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்