அடுத்த சிக்கல்... ராஜேந்திர பாலாஜிக்கு இறுகும் பிடி... ஹைகோர்ட்டில் பரபரப்பு மனு

x

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனுவில், அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி புகாரின்பேரில் 2021-ல் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டதாகவும் 3 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு உள்ளதாலும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்