நாளை வாக்கு எண்ணிக்கை - இன்று தேர்தல் ஆணையர் செய்த செயல்

x

நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், நடந்து முடிந்த தேர்தலில், 642 மில்லியன் பெருமைமிகு இந்திய வாக்காளர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார். இது ஜி7 நாடுகளில் உள்ள வாக்காளர்களை விட ஒன்றரை மடங்கு அதிகம் என்றும், 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களைவிட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டார். 312 மில்லியன் பெண் வாக்காளர்கள் என்பது உலக அளவில் மிக அதிகமானது என்று தெரிவித்த ராஜீவ்குமார், தேர்தலில் வாக்களித்த அனைத்து பெண் வாக்காளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற 85 வயதுக்கும் அதிகமானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வணக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்