நாட்டிலே முதல்முறையாக ஒரு தொகுதியில் 2.18 லட்சம் வாக்குகள் பெற்ற `நோட்டா' - மிரண்டுபோன கட்சிகள்

x

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் மக்களவைத் தொகுதியில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வாணி 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சஞ்சய் 51 ஆயிரத்து 659 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். இதற்கிடையே, அந்த தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்ப பெற்றதால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் பலரும் நோட்டாவிற்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்