பிரசாரத்தில் கல்வீச்சு சம்பவம் - படாரென்று ஹெல்மெட்டை மாட்டிய நாதக வேட்பாளர்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஹெல்மெட் அணிந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கொருவர் கல் வீசி தாக்கி கொண்டனர். இந்த சூழலில், வாக்கூர் பகுதியில் அபிநயா பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாக நாம் தமிழர் கட்சியினர் கூறியதால் மீண்டும் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், அபிநயா ஹெல்மெட் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்