பகீர் கிளப்பிய ஈபிஎஸ் ட்வீட்

x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார


Next Story

மேலும் செய்திகள்