துணை மேயரின் பேச்சால் கொந்தளித்த கவுன்சிலர்கள் பரபரப்பான மாமன்ற கூட்டம்

x

மதுரை மாமன்ற கூட்டத்தில் வெள்ள பாதிப்பு தொடர்பான துணை மேயர் நாகராஜன் பேச்சுக்கு தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லூர் கண்மாய், பந்தல்குடி கால்வாயால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை குற்றம்சாட்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை மேயர் பேசினார். இதனால் கோபம் அடைந்த தி.மு.க கவுன்சிலர்கள், பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்தினர். திமுக - மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான மோதலால் மாநகராட்சிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை துணை மேயர் முன்வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்