திமுக பவள விழா.. மும்முரமாக நடைபெறும் வேலை.. இன்னும் சற்று நேரத்தில்

x

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்காக 500 அடி நீளம் 250 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு இல்லத்தை போன்று, விழாவின் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்