"மிகப்பெரிய சதி.." கொந்தளித்த தயாநிதி மாறன்.. ஆதரவாக நின்ற சபாநாயகர் ஓம் பிர்லா | Dayanidhi Maran

x

மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய தயாநிதி மாறன், சென்னை - டெல்லிக்கு தனியார் மென்பொருளில் டிக்கெட் முன்பதிவு செய்வதாகவும், அதில் டிக்கெட் பதிவு செய்யும் போது 33 ஆயிரம் கட்டணம் காட்டுவதாகவும், பணம் செலுத்தும் போது 93 ஆயிரம் ரூபாய் என காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். இது அடிக்கடி நிகழ்வதாகவும், இதில் மிகப்பெரிய சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியவர், விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விரிவான விசாரணை நடத்த கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லாவும், தயாநிதி மாறன் மிக முக்கியமான பிரச்சினையை எழுப்பி இருப்பதாகவும், இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அப்போது பதில் கூறிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நிச்சயமாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுபோன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்